2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு!

 
Noble prize

2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Physics

அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். அந்த வகையில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு மைக்ரோ ஆர்என்ஏவை (RNA) கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 


இந்தாண்டுக்கான வேதியியலுக்கான விருது அக். 9-ம் தேதியும், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான பரிசுகள் முறையே அக். 10, 11 மற்றும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

From around the web