சீனாவில் மருத்துவமனையில் கத்தி குத்து.. 10 பேர் பலி, 21 பேர் காயம்
![China](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/2b2369927b84999019a1f1edcf1e9f03.webp)
சீனாவில் உள்ள மருத்துவமனையில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யுனான் மாகாணம் ஜாவோடாங் நகரில் உள்ள ஜென்ஜியாங் கவுண்டியில் மக்கள் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர் உள்ளூர் வாலிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
சீனாவில் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடமாக பொது இடங்களில் ஏராளமான கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
Death toll in southwest #China #hospital attack rises to ten ( 21 wounded)https://t.co/YoI1sK9UUv pic.twitter.com/rbpWiI8WiR
— Shadi Alkasim (@Shadi_Alkasim) May 7, 2024
குவாங்டோங் மாகாணத்தில் ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர். யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஜென்ஜியோங் கவுன்ட்டி 2020 வரைக்கும் வறுமை பிடியில் இருந்ததாக கூறப்படுகிறது.