பாலைவனத்தில் மிக மோசமான நிலையில் 6 சடலங்கள்.. திணறும் அதிகாரிகள்.. அமெரிக்காவில் பரபரப்பு

 
USA

அமெரிக்காவில் உள்ள பாலைவனத்தில் மிக மோசமான நிலையில் 6 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மொஜாவே பாலைவனப் பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் சான் பெர்னார்டினோ மாவட்ட ஷெரிப் அலுவலகத்தில் தொடர்புகொண்ட ஒருவர் எல் மிராஜ் பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 5 உடல்களை போலீசார் முதலில் மீட்டுள்ளனர். புதன்கிழமை பகல் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தின் பின்னணி தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

dead-body

ஆனால் 6 பேர்களும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, சில உடல்கள் கொளுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

உடல்கள் மீட்கப்பட்ட பகுதியானது லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடகிழக்கே சுமார் 50 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப பல மணி நேரங்களாகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

USA

மேலும், அந்த உடல்கள் அப்பகுதியில் எத்தனை நாட்கள் காணப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மட்டுமின்றி, மீட்கப்பட்ட உடல்களின் அடையாளம் உட்பட வயது, பாலினம் என எந்த தகவலையும் போலீசார் வெளியிட மறுத்துள்ளனர்.

From around the web