கடுமையான தலைவலி.. அமெரிக்காவில் அமீபா நோய்க்கு 17 வயது சிறுமி பலி..!

 
Megan

அமெரிக்காவில் 17 வயது சிறுமி மூளை தின்னும் அமீபாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெக்லேரியா ஃபோலேரி எனப்படும் நீர்நிலைகளில் காணப்படும் கிருமி, பாக்டீரியாக்களை உண்ணும் ஒரு கிருமியாகும். இந்த கிருமி மிதமான வெப்பநிலை கொண்ட குளங்கள், ஏரிகள், சுடுநீர் ஊற்றுகள் போன்ற இடங்களில் வாழக்கூடியதாகும். இந்த கிருமிகள், நீர்நிலைகளில் மக்கள் நீந்தும்போது, அவர்களுடைய மூக்கு வழியாக மூளைக்குள் நுழைந்துவிடும். மூளைக்குள் சென்று மூளையை சேதப்படுத்தி, மரணத்தையும் ஏற்படுத்திவிடும்.

Amoeba

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கடந்த மாதம், அதாவது, ஜூலை 11ம் தேதி, மேகன் எபென்ரோத் (17) என்ற இளம்பெண் தன் தோழிகளுடன் நீந்தச் சென்றிருக்கிறாள். வீட்டிற்கு சென்றவருக்கு நான்கு நாட்களுக்குப் பின் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மேகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

இவருக்கு எதனால் அந்த தலைவலி என்பது முதலில் தெரியவராத நிலையில், ஜூலை 21-ம் தேதி தான் மேகன் நெக்லேரியா ஃபோலேரி எனப்படும் நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுநாள் மேகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Megan

சமீபத்தில், நெவடா மாகாணத்தில், உட்ரோ டர்னர் பண்டி என்ற இரண்டு வயது சிறுவன், சுடுநீர் ஊற்று ஒன்றில் விளையாடும்போது இந்த நோய்க் கிருமியின் பாதிப்புக்குள்ளாகி, ஏழு நாட்கள் அந்த கிருமியின் பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளுடன் போராடிய நிலையில் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1962 முதல் 2023 வரையில், பாதிக்கப்பட்ட 150 பேர்களில் வெறும் 5 பேர் மட்டுமே மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு ஏற்பட்ட 3 நாட்களில் மரணம் உறுதி என்றே இதுவரையான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

From around the web