ரூ. 1.46 கோடிக்கு அறுவை சிகிச்சை.. உயரத்தை அதிகரித்த 5 அடி வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

 
yeferson-cossio

கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயரமாவதற்காக அறுவை சிகிச்சை செய்த பின் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், அறுவை சிகிச்சை செய்துகொள்வதும் மற்றும் அழகுசாதன சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதும் தங்களின் சிறந்த தோற்றத்தை மாற்ற விரும்பும் நபர்களுக்கு பொதுவானதாகிவிட்டது. உதடுகள், மூக்கு, கண்கள், காதுகள், இடுப்பு, வயிறு என உடலின் பல பாகங்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் கைகொடுக்குமா என்பது கேள்வி குறிதான். பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் உயிர் இழந்துள்ளனர். இதுகுறித்த பல செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், உயரத்தை அதிகரிக்க 29 வயது இளைஞர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்போது அவர் படாதபாடு பட்டு வருவதாக குமுறி உள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உயரம் 2 அங்குலம் அதிகரித்துள்ளதாக கூறினார். ஆனால் உயரம் அதிகரிப்பை விட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், சரியாக தூங்க கூட முடியவில்லை என்றும் வேதனையாகக் கூறியுள்ளார்.

yeferson-cossio

உயரமாவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர் ஜெபர்சன் கோசியோ. இவர் கொலம்பியாவில் வசிக்கிறார். ஜெபர்சன் முதலில் 5 அடி 8 அங்குலம்தான் இருந்தாராம். நான்கு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை 6 அடியாக உயர்த்தியுள்ளார் என்று அவர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 1.46 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு வலி அதிகரித்துள்ளதாம். அது குறையவில்லை. இரவு மாத்திரை சாப்பிட்டாலும் தூக்கம் வரவில்லை. தற்போது வலியை நிறுத்துவதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய போகிறாராம்.

yeferson-cossio

அதுபோல், அவருக்கு தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாதீர்கள். அழகுக்காக நீங்கள் செய்யும் காரியம் மோசமான பின்விளைவுகளை விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் என எச்சரிக்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.

From around the web