25 ஆண்டுகளுக்கு பின் தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. வைரலான வீடியோ!

 
Taiwan

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடந்த 25 ஆண்டுகளில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தைவானின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதனை அந்நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.  உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு (0000 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ரெயிலில் பயணம் செய்தபோது, ரயில் குலுங்கியபடி சென்ற வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன.  

Earthquake

ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா தீவு உட்பட பிராந்தியத்தில் உள்ள தொலைதூர ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டது. தைவானில், அதிகாரிகள் குறுஞ்செய்தி மூலம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டனர், “கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கவும், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மற்றும் அலைகளின் திடீர் எழுச்சியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவனம் செலுத்தவும்” என்று தெரிவிக்கப்பட்டது.

ஹுவாலியன் அருகே 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை உள்ளடக்கிய அதிர்வுகள், தைபேயிலும் உணரப்பட்டன என்று அந்த ஊர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. தலைநகரில், மெட்ரோ சிறிது நேரம் இயங்குவதை நிறுத்தியது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் தொடங்கப்பட்டது.  


இதுகுறித்து விளக்கமளித்த தைபேயின் மத்திய வானிலை நிர்வாகத்தின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென்-ஃபு, “நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. அது ஆழமற்றது. இது தைவான் மற்றும் கடல் தீவுகள் முழுவதும் உணரப்பட்டது. 1999 நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 ஆண்டுகளில் இது மிகவும் வலுவானது. செப்டம்பர் 1999 இல் தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த மோசமான இயற்கை பேரழிவில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டனர். மூன்று நாட்களில் 6.5 முதல் 7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்கள் நிலத்திற்கு அருகில் இருக்கும்” என்று கூறினார்.

From around the web