போப் மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், போப் பிரான்சிஸின் மறைவு உலகளாவிய சமூகத்திற்கு பெரும் இழப்பு எனவும், அவரது அமைதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்திற்கான பணிகள் என்றும் நினைவுகூரப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், அவரது ஆன்மீக வழிகாட்டுதலும், சமூக நீதிக்கான அர்ப்பணிப்பும் உலக மக்களுக்கு உத்வேகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, போப் பிரான்சிஸின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். அவரது எளிமை, கருணை மற்றும் உலக அமைதிக்கான பங்களிப்பு உலகெங்கும் உள்ள மக்களால் போற்றப்பட்டதாகவும், அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று கூறியுள்ளார்.