69 வயது முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு.. காப்பாற்ற முயன்ற நண்பருக்கு நேர்ந்த சோகம்!
![Australia](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/a0032348e214099657426b76f1f7d831.png)
ஆஸ்திரேலியாவில் நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா நேற்று முன்தினம் (செப். 9) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார்.
அப்போது விஷப் பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் பலமுறை கடித்தது. இதனால் அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது. அவசர மருத்துவ முதலுதவி குழு தேவையான அனைத்து சிகிச்சைகளை செய்த நிலையிலும், விஷப் பாம்பு கடித்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் முதலில் விஷப் பாம்பு காலில் சுற்றிய 69 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடனடியாக மேக்கே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.