பாகிஸ்தானில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் பலி!

 
Pakistan

பாகிஸ்தானில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.

Pakistan

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் வணிக வளாகத்தில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், வணிக வளாகத்திற்குள் சிக்கிய 50 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

ஆனால், இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். வணிக வளாகத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pakistan

தீ தொடர்ந்து வணிக வளாகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் அதை கட்டுப்படுத்த கூடுதலாக தீயணைப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

From around the web