காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

 
Congo

ஆப்ரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஐ தாண்டியது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

Congo

குறிப்பாக நயாமுகுபி என்ற கிராமத்தில் சுமார் 100 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. இதில், ஏராளமானோரை காணவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது மழை குறைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் ஆங்காங்கே ஒதுங்கிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.

Congo

அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

From around the web