பிரபல ஆப்கானிஸ்தான் பாடகி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..?

 
Hasiba Noori

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்கலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 38.

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகியான ஹசிபா நூரி, ‘மினா’, ‘சப்ஜா ஜனம்’ மற்றும் ‘ஆலா யாரம்’ போன்ற பாடல்களால் ரசிகர்களை வசியபடுத்தியுள்ளார். அரியானா டெலிவிஷன் மற்றும் ஏஎம்சி டிவி போன்ற ஆப்கானிஸ்தான் டிவி சேனல்களில் அவர் தனது நடிப்பின் மூலம் புகழ் பெற்றார்.

ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, ஹசிபா நூரி, பல கலைஞர்கள் மற்றும் பிரபலங்களைப் போலவே, பாகிஸ்தானில் பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகளை தேடி அகதியாக தனது தாயகத்தை விட்டு வெளியேறத் தேர்வு செய்தார். பெண்களின் உரிமைகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மீதான தலிபான்களின் கட்டுப்பாடான கொள்கைகள், அடக்குமுறை ஆட்சியின் கீழ் தங்கள் உயிர்கள் மற்றும் தொழில்களுக்கு பயந்து ஏராளமான படைப்பாற்றல் நபர்களை வெளியேறத் தூண்டியது.

Hasiba Noori

இந்த நிலையில், ஹசிபா நூரி நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த துயர சம்பவம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பாடகியின் உயிரைப் பறித்த தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய போலீசார் தீவிரமாக தடயங்களைத் தொடர்கின்றனர்.


நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் இறந்த செய்தியை ஒரு சமூக ஊடக இடுகையில் உறுதிப்படுத்தி உள்ளார். ஹசிபா நூரியின் மரணம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது. சுமார் 14 லட்சம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் எண்ணற்ற ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானில் குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில், அனீஸ் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில் ஹசிபா நூரி உயிரிழுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

From around the web