ஹோட்டல் அறையில் தூங்கியவருக்கு மற்றொரு ஆணால் நேர்ந்த கொடூரம்.. அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

 
Nashville

அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் சவுத் ஹில்டன் என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி நபர் ஒருவர் தங்கியுள்ளார். இவர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 5 மணி அளவில் யாரோ மர்ம நபர் நுழைந்து தன்னை சீண்டுவது போல உணர்ந்துள்ளார்.

toes

படுக்கை அருகே இருந்த விளக்கை ஆன் செய்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஹோட்டலின் மேலாளரான டேவிட் நீல் என்பவர் அறைக்குள் நுழைந்து, அந்த நபரின் கால் விரல்களை வாயால் நக்கியுள்ளார். 

மேலாளர் டேவிட்டின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், 52 வயதான மேலாளர் டேவிட் நீல் கைது செய்யப்பட்டார். இவர் நிர்வாகத்திடம் இருந்த கார்ட் சாவி போட்டு அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. 

Kerala-youth-arrested-for-molesting-female-doctor

போலீசார் விசாரணையில் அறைக்குள் புகை வாசனை வந்தது போல தோன்றியதாகவும், வாடிக்கையாளர் பத்திரமாக இருக்கிறாரா என்று பார்க்கவே அங்கு சென்றதாகவும் டேவிட் நீல் தெரிவித்துள்ளார். இருப்பினும், கைது செய்யப்பட்ட நபரை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

From around the web