அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!

 
Joe-biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவி தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால், கொரோனா வழிகாட்டுதல்களை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்க கூடாது என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது.

சாமானிய மக்கள் முதல் பெரும் உலக தலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கும் பரவும் தன்மையுடன் தொற்று பரவி வருகிறது.

Joe-Biden

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,17,67,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 37,43,320 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10,50,702 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 79 வயதாகும் ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

White House

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டுள்ள ஜோ பைடன், இரண்டு முறை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளார். ஜோ பைடன் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் மாத்திரையையும் போட தொடங்கியிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web