ஆப்கானில் பெண் பொம்மைகளை கூட விடாத தாலிபான்கள்... ‛தலை’ இருக்கவே கூடாது அடாவடி!!

 
Afghan

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப்பட்ட நிலையில், துணிக்கடைகளில் பெண் பொம்மைகளின் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால், தாலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர்.

தாலிபான்கள் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது அதனை பின்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக புதுபுது கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

தாலிபன் அரசு பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்குகான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பர்தா அணியாமல் வெளியே நடமாடத் தடை, உயர்கல்வி மேற்கொள்ள தடை, வாகன லைசென்ஸ் பெற தடை என்று பல கட்டுப்பாடுகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Taliban

இந்நிலையில் துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதாவது பொதுவாக ஜவுளி கடைகளில் ஆளுயர பொம்மைகள் புதிய டிசைன் ஆடைகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த பொம்மைகளுக்கு தலை இருக்கக் கூடாது என்று தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிரானது என்பதால் தலையில்லாமல்தான் பொம்மைகள் இருக்க வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி தற்போது ஜவுளிக்கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்களை கருப்பு நிறத்திலான கவர், துணி கொண்டு கடைக்காரர்கள் மூடி வைத்துள்ளனர். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஜவுளிக்கடைகளில் உள்ள பொம்மைகளின் முகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளது.

Afghan

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஜவுளிக்கடைக்காரர் கூறுகையில், “தற்போது பொம்மைகளின் முகத்தை மறைக்க கூறியுள்ளனர். இது பரவாயில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு பொம்மைகள் வைக்க கூடாது எனவும், தலை இருந்தால் அதனை வெட்டியும் அகற்றினர். அந்த உத்தரவை ஒப்பிடும்போது இது பரவாயில்லை” என நிம்மதி அடைந்தார். இருப்பினும் கூட தாலிபான்களின் இத்தகைய செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சாரா வஹேதி என்ற ஆப்கானிய மனித உரிமை ஆர்வலர் தனது ட்விட்டர் பக்கத்தில் முகங்கள் மறைக்கப்பட்ட பொம்மைகளை வெளியிட்டுள்ளார். இதில், “பெண்கள் மீதான தலிபான்களின் வெறுப்பு உயிருக்கு அப்பாற்பட்டது. பொம்மைளின் முகத்தை மறைக்க கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொம்மைகளுக்கே இந்த நிலைமை என்றால் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு மோசமாக மாறப்போகிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பெண்களின் வாழ்க்கை மோசமாகும் என்பதற்கான அறிகுறியாக தான் இது இருக்கும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

From around the web