தென்கொரியா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து! 4 நோயாளிகளுடன் ஓரு நர்சு உடல் கருகி பலி!!

 
south-korea

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளும், நர்சும் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இச்சியோன் நகரில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது தளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 2-வது, 3-வது தளங்களில் அலுவலகங்களும், முதல் தளத்தில் ஓட்டல்களும் உள்ளன.

south-korea

இந்த நிலையில் நேற்று காலை 10.17 மணி அளவில் 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மருத்துவமனை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர்.

south-koerea

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 21 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 11.29 மணி அளவில் தீயை போராடி அனைத்தனர். இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 நோயாளிகள் மற்றும் ஒரு நர்சு என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web