கணவனின் ஆணுறுப்பை துண்டித்த உளவியல் ஆசிரியர்..! கையில் ரத்த கரையுடன் மனைவி!!

அர்ஜென்டினாவில் கணவனின் ஆணுறுப்பை மனைவி கத்தியால் அகற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவின் ஆல்டோஸ் டி சான் லோரென்சோ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஃப்ளோரென்சியா அமடோ கட்டானியோ (41). உளவியல் ஆசிரியரான இவர், தனது இசைக்கலைஞர் கணவரான பெட்ரோ ஃபெடெரிகோ ஜராட்டின் உடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் உள்ளூர் வட்டாரங்கள் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் ஒருவனும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ஃப்ளோரென்சியா தனது கணவர் பெட்ரோவை உடல் முழுவதும் பல இடங்களில் கத்தியால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் கணவனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்து கொலையும் செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெட்ரோவின் உடலில் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து கொலையாளியான அவரது மனைவி அமடோ கட்டேனியோவை ஜனவரி 11-ம் தேதி, கைகளில் இரத்தக்கறையுடன் அவரது தாயார் வீட்டிற்கு வந்த பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அமடோ கட்டானியோ, லா பிளாட்டாவில் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மனநல வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். அவள் மனரீதியாக தகுதியற்றவள் என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அவள் ஒரு விசாரணையை எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று வழக்கறிஞர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.