தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ஒருவர் பலி, 146 பேர் படுகாயம்

 
Taiwan

தைவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 146 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

taiwan

இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.14 மணியளவில் டைடுங் நகரில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் பின்னர் அது 6.8 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் டைடுங் நகரில் உள்ள சிஸ்ஹேங் என்கிற இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த தைவானும் அதிர்ந்தது. தலைநகர் தைபே உள்பட நாட்டின் பல நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.


இந்ந நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 146 பேர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 2016-ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், அதே நேரத்தில் 1999-ல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

From around the web