வருங்கால மனைவியை துண்டு துண்டாக வெட்டி... ஃப்ரீசரில் பாதுகாத்த திருமண ரியாலிட்டி ஷோ பிரபலம்!!

 
Ukraine

உக்ரைனைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர் தமது வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிறப்புறுப்புகளை ஃப்ரீசருக்குள் பாதுகாத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் பிரபல வழக்கறிஞரும் முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான பீட்டர் பிகன், தமது வருங்கால மனைவியான ஓல்ஹா டேவிடென்கோ (30) என்பவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை நகரின் பல பாகங்களில் வீசியுள்ளார்.

இவர் உக்ரைனில் பிரபலமான திருமண ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு, 2019-ம் ஆண்டுக்கான வெற்றியாளராகவும் தேர்வாகியுள்ளார். கொலை செய்யப்பட்ட ஓல்ஹா டேவிடென்கோ என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமானவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Ukraine

கொலைக்கு பின்னர், அவரது இதயம், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகங்களை ப்ரீஸருக்குள் பத்திரப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி, பல நாட்களாக உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும், கொல்லப்பட்ட பெண்ணின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் ஒரு பகுதி குளத்தில் வீசப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஓல்ஹா டேவிடென்கோ திடீரென்று மாயமான நிலையில், அவரது உடைகள் மற்றும் விரல் அடையாளங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Petr-begun

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னரே இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததும், இருவரும் பழகிய ஒரு வாரத்திலேயேஓல்ஹா டேவிடென்கோ இந்த நபரின் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரைக்கும் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம் என கூறுகின்றனர்.

From around the web