9 வயது மகனை பலமுறை கத்தியால் கொலை செய்த இந்திய வம்சாவளி தந்தை!! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் தனது 9 வயது மகனைக் கத்தியால் குத்திக் கொன்றதாக 39 தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மெக்கின்னி பகுதியில் வசித்து வருபவர் சுப்ரமணியன் பொன்னழகன் (39). இந்திய வம்சாவளியான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி தனது 9 வயது மகனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தன்னைத் தானே கத்தியால் தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுப்ரமணியனை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் சுப்ரமணியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பத்திரம் வழங்கப்பட்டது.
போலீசாரின் கூற்றப்படி, நெடுஞ்சாலை 380 மற்றும் கஸ்டர் சாலைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. மாலை 4 மணியளவில் ஒருவர் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ பகுதிக்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக தாழ் இடப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, சுப்ரமணியன் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரது 9 வயது மகன் பல கத்திக்குத்து காயங்களுடன் கேரேஜில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வீட்டில் வேறு யாரும் இல்லை. சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். தொடர்ந்து சுப்ரமணியன் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த தகவல் வெளியீடப்படவில்லை.
Regarding our ongoing investigation:
— McKinney Police (@McKinneyPolice) January 8, 2023
Subramanian Ponnazhakan (01-14-83) was arraigned on a Capital Murder warrant with a one million dollar bond this afternoon.
He is still hospitalized for treatment of self-inflicted wounds after being taken into custody on Friday. (MORE) pic.twitter.com/BOyJOOjq2e
இந்த கடினமான நேரத்தில் குழந்தையின் தாய் மற்றும் அவர்களின் முழு குடும்பத்தையும் எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுக்கமான சமூகம் பேரழிவிற்குள்ளானது என்று இந்திய அசோசியேஷன் ஆஃப் நார்த் டெக்சாஸ் உறுப்பினர் தினேஷ் ஹூடா கூறியுள்ளார். மேலும் மக்கள் இன்னும் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அவர் கூறினார். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், சூழ்நிலையை உங்களால் கையாள முடியவில்லை என்றால், உதவிக்கு நண்பர்களை அணுகவும் என்றார்.