அமெரிக்காவில் விமானம் உடைந்து விழுந்து 4 பேர் பலி!! சோதனை ஓட்டத்தின் போது நேர்ந்த சோகம்!

 
Plane-crash

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் திடீரென உடைந்து விழந்த விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஸ்னோஹோமிஷ் நகரில் உள்ள ஹார்வி பீல்ட் விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான செஸ்னா 208பி சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். 

Plane-crash

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென உடைந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், இது குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த விபத்து குறித்து கிறிஸ்மான் கூறுகையில், “இந்த விபத்தில் ரைஸ்பெக் நிறுவனத்தின் உறுப்பினர்களை இழந்துள்ளது. மேலும் ரைஸ்பெக் இந்த இழப்பை ஆழமாக உணர்ந்தாலும், இந்தக் குழு உறுப்பினர்களின் குடும்பங்கள் மற்றும் பிற அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் வலியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web