மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000.. மேல்முறையீடு செய்தவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அப்டேட்!

 
1000 1000

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் 2ம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.  

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

1000

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. 

MKS

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் 2ம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கிறார்.  

From around the web