ஆந்திர பெண் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை.. சுற்றுலா வந்த இடத்தில் சோகம்!

 
Andhra

ஏலகிரி மலையில் சுற்றுலா வந்த ஆந்திர மாநில பெண் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி. இவரது மகள் ஹிமா (25). நடன கலைஞரான இவர், திருமணமாகி கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு அகனதீபிகா (7) என்கிற மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடனம் ஆடும் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி பெங்களூரு பகுதியில் நடன நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

suicide

பின்னர் ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்துள்ளார். ஏலகிரி மலையில் மங்களம் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் ஹிமா உள்பட 8 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை அறையில் இருந்த மற்றொரு பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்து மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

Yelagiri Hills PS

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று தங்கும் விடுதி மற்றும் ஹிமாவுடன் வந்திருந்த நடன கலைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து அவரது தந்தை நரசிம்ம ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web