குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

 
TNPSC

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை 24-ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

TNPSC

இதனிடையே ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. அதுமட்டுமின்றி மீம்ஸ்களும் இணையத்தை நிரப்பின. 

இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றதாக தெரிவித்தது.

TNPSC

ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை. குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தின் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web