10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? நாளை மறுநாள் வெளியிடுகிறார் அன்பில் மகேஷ்

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இந்நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை மறுநாள் (அக். 14) வெளியிட உள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோயம்புத்தூரில் வருகிற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதியுடன் முடிந்தது. அதேபோல 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25-ம் தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது.