லண்டன் - சென்னை விமான சேவை என்னாச்சு? ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி கோரிக்கை!!

 
Kalanidhi Veerasamy

சென்னையிலிருந்து லண்டனுக்கு இருந்த நேரடி விமான சேவை கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்டது.மும்பை, டெல்லி, பெங்களூரு நகரங்களுக்கு லண்டன் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை - லண்டன் நேரடி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

லண்டன் - சென்னை விமான சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினர் சர் ஸ்டீபன் டிம்ஸ் கோரிக்கை வைத்தார். இதை குறிப்பிட்டு வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி ஒன்றிய விமானத் துறை அமைச்சர் கிஞ்­சாப்பு இராம் மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..

”லண்­ட­னில் வாழும் 3 லட்­சத்­திற்­கும் மேலான தமி­ழர்­க­ளின் அமைப்பு (பெட­ரே­ஷன்), லண்­டன் - சென்­னைக்கு நேரடி விமான சேவையை வழங்க வற்­பு­றுத்தி வரு­கின்­றது. கோவிட்-19 பெருந்­தொற்று பாதிப்­புக்கு முன்பு சென்னை - லண்­டன் நேரடி விமான சேவை இருந்து வந்­துள்­ளது. கோவிட்-19 பாதிப்­பின் போது நிறுத்­தப்­பட்ட இந்த விமான சேவை மீண்­டும் துவங்­கப்­ப­டா ­மல் இருப்­பது வருத்­தத்­திற்­கு­ரி­யது.

சென்னை மாந­க­ரம், லண்­டன் நக­ரு­டன் கலை, பண்­பாட்டு வழி­யி­லும், முக்­கிய வியா­பார தள­மா­க­வும் இணைந்­துள்­ளது. தமிழ்­நாட்­டைச் சேர்ந்த இலட்­சக்­க­ணக்­கான தமி­ழர்­கள் அங்கு பணி நிமித்­த­மா­க­வும், மேல்­கல்வி பயில்­வ­தற்­கா­க­வும் இங்­கி­லாந்து நாட்­டிற்கு குடி­பெ­யர்ந்து வாழ்ந்து வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், மீண்­டும் நேரடி சேவை­யைத் தொடங்­கி­னால், அது நேரடி வர்த்­த­கத்தை மேலும் ஊக்­கப்­ப­டுத்தி வளர்ச்சி பெறச் செய்­யும். அங்கு வாழும் தமி­ழர்­க­ளுக்­கும் மிகுந்த பய­னுள்­ள­தாக இருக்­கும். சென்னை - லண்­டன் நேரடி விமான சேவையை உட­ன­டி­யா­கத் துவக்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி கேட்டுக்கொள்கிறேன்” என்று  கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்

From around the web