ஆளுநர் ஆர்.என்.ரவி க்கு செல்வப் பெருந்தகை கண்டனம்!!

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேந்தர் ஆனார். துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை செய்தார் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டி அதில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரையும் அழைத்துள்ளார் ஆர்.என்.ரவி. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. துணைவேந்தர்கள் இதில் பங்கேற்பார்களா? பங்கேற்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் என்று கூறியும், சட்டவிரோத செயலை செய்த ஆளுநர் பதவி விலகி இருக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி அவர்கள் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும். ஆளுநரின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.