விஸ்வகர்மா OUT... கலைஞர் கைவினைத் திட்டம் IN.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

 
CM Function

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிறு குறுந்தொழில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, தலைமைச் செயலாளர், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

கலைஞர் கைவினைத் திட்டம், ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்திலிருந்து எப்படி வேறுபட்டது, விஸ்வகர்மா திட்டத்தை புறக்கணித்து கலைஞர் கைவினைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக உரையாற்றினார்.

விழா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், 'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் நம் திராவிட மாடல்அரசு கலைஞர் கைவினைத் திட்டம் உருவாக்கியது ஏன்?

பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம். முதிர்ச்சி பெற்ற 35 வயதை எட்டியோர்தான் விண்ணப்பிக்க முடியும் என்பது நம் திட்டம்.

காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். யாரும், விரும்பிய எந்தத் தொழிலையும் செய்யக் கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 18 திட்டங்களை உள்ளடக்கியது விஸ்வகர்மா, அதனை 25 திட்டங்களாக நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம்.

விஸ்வகர்மா திட்டத்தில் கடன் மட்டுமே பெற இயலும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்தோடு 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம்.

மொத்தத்தில், குடும்பத் தொழிலை ஊக்குவித்து, நம் மாணவர்களின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமல்ல நம்முடையது; யாரையும் ஒதுக்காத அனைவருக்குமான சமூகநீதி நோக்கிலான திட்டம்!” என்று கூறியுள்ளார்.


 

From around the web