ஏரியில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. சேலம் அருகே சோகம்

 
Salem

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறார் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் கூலித்தொழிலாளி செய்து வருகிறார். இவருடைய மகள் சிவருந்தினி (20), மகன் சிவஸ்ரீ (10). அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் முனுசாமி மகள் ஜீவதர்ஷினி (எ) திவ்யதர்ஷினி(14). இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் இன்று காலை துணி துவைக்க சென்றனர்.

water

அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதியை சேர்தவர்கள் வருவதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Nangavalli PS

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள நங்கவள்ளி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web