இரவெல்லாம் அழுது தீர்த்த பரிதாப வினோதினி.. காதலனுக்காக காதலி எடுத்த விபரீத முடிவு..!

 
chennai

ஆவடி அருகே ரயிலில் அடிப்பட்டு காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே உள்ள கோவில்பாதகை பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (62). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வினோதினி (22 ). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவர் படிக்கும்போது இவருடன் படித்த கரிமேடு பகுதியை சேர்ந்த வசந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி வசந்த் கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

chennai

காதலன் வசந்த் மரண செய்தியை கேட்ட வினோதினியின் மனதில் பேரிடியை இறக்கியது. ஒவ்வொரு நாளும் காதலனை குறித்து வருந்திக்கொண்டிருந்த வினோதினி காதலன் இல்லாத உலகில் நாம் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார். மன உளைச்சலில் இருந்த வினோதினி கடந்த 16-ம் தேதி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் அறையை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வினோதினி வீட்டில் சென்று பார்த்த போது, வினோதினி படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதை கண்டு அடைந்த அவர்கள் உடனே ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

Avadi Tank Factory PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோதினியின் உடலை கீழே இறக்கி தடயங்களை சேகரித்து குறிப்பிகளை எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வினோதினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காதலன் இறந்த சோகத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web