கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 3 பேர் பரிதாப பலி!

 
Chennai

சென்னையில் தனியார் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் ஷேக்மேட் பப் என்ற கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று இரவு கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கூரை இடிந்து விழுந்தபோது கேளிக்கை விடுதிக்குள் ஏராளமானோர் இருந்ததாக கூறப்படுகிறது.

Chennai

விசாரணையில், அவர்கள் ஓட்டல் ஊழியர்களான சென்னையைச் சேர்ந்த சைக்குளோன் ராஜ் (45) , மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மேக்ஸ் (21), லாலே(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறை வீரர்கள், போலீசார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் படையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

செயின்ட் மேரிஸ் சாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால், மெட்ரோ பணியால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாநகர கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா நேரில் பார்வையிட்டார்.

Chennai

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்டடுள்ளன. இடிபாடுகளில் சிக்கி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மெட்ரோ வேலையால் இந்த விபத்து நடந்ததா என்று கூற முடியாது” என்று தெரிவித்தார்.

From around the web