அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.. தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின்தேவை

 
Electricity

தமிழ்நாட்டில் வெயிலின் காரணமாக தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் சேலம், ஈரோடு, கரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக, கத்தரி வெயிலுக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது. இதனால், நடப்பு ஆண்டில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரேநாளில் பல இடங்களில 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மின் தேவை அதிகரித்தது.

Heat wave

இதனால் தமிழ்நாடு மின்சாரத்தின் தேவை அதிகபட்சமாக நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை தொட்டது. முன்னதாக கடந்த மாதம் 3-ம் தேதி 19 ஆயிரத்து 413 மெகாவாட், 4-ம் தேதி 19 ஆயிரத்து 415 மெகாவாட், 5-ம் தேதி 19 ஆயிரத்து 850, 8-ம் தேதி 20 ஆயிரத்து 341 மெகாவாட், 26-ம் தேதி அதிகபட்சமாக 20 ஆயிரத்து 583 மெகாவாட் என்ற அளவில் தேவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

தேவைக்கு ஏற்ப உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு சீரான வகையில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சூரிய மின்சக்தி மூலம் 4 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், காற்றாலைகளும் தற்போது மின்சார உற்பத்தியை தொடங்கி உள்ளது.

TNEB

அனல் மின்நிலையங்களிலும் சராசரியாக 3,600 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்தும் 5,200 மெகாவாட்டுக்கு மேல் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சீரான மின்சாரம் வினியோகம் செய்வதில் உறுதி பூண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

From around the web