சமத்துவத்தையும், சமநீ​தி​யை​யும் கற்​பிப்​பது​தான் கடமை.. துணைவேந்தர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!!

 
CM Stalin

மாணவர்​களிடையே சமத்துவத்தையும், சமநீ​தி​யை​யும் கற்​பிப்​பது​தான் உங்​களு​டைய தலை​யாய கடமை​யாக இருக்க வேண்​டும் என்று பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதlலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில், பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக்​கூட்​டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடை​பெற்​றது. அமைச்​சர்​கள், எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், எஸ்​.ரகுப​தி, மு.பெ.​சாமி​நாதன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், மா.சுப்​பிரமணி​யன், கோவி.செழியன், தலைமை செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், உயர்​கல்​வித்​துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

”இந்​தி​யா​வின் கல்வி வளர்ச்​சி​யில் தமிழ்​நாடு ஒளி​விளக்​காக உயர்ந்து நிற்​கிறது. தரமான கல்​வி​யால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்​டிருக்​கிறோம். அறி​வியல் தொழில்​நுட்​பங்​களில், உலகம் வேக​மாக மாறி வரு​கிறது. இதற்கு ஈடு கொடுக்​கக்​கூடிய வகை​யில் நம்​முடைய பல்​கலைக்​கழகங்​கள் செயல்​பட​வேண்​டும்.

ஆ​ராய்ச்சி மற்​றும் புது​மைக்​கான மையங்​களாக உயர்​கல்​வி​யின் உலகளா​விய தலை​மையக​மாக தமிழக பல்​கலைக் கழகங்​கள் திகழ​வேண்​டும். இது​தான் என் கனவு.

மாணவர்​களிடையே சமத்துவத்தையும், சமநீ​தி​யை​யும் கற்​பிப்​பது​தான் உங்​களு​டைய தலை​யாய கடமை​யாக இருக்க வேண்​டும். பிரி​வினையைத் தூண்​டும் கருத்​துகளுக்​கோ, நடவடிக்​கைகளுக்​கோ கல்​வி நிலை​யங்​களில்​ இடமில்​லை. இதில்​ எவ்​வித​மான சமரசத்​தை​யும்​ ஏற்​றுக்​கொள்​ள இயலாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

From around the web