தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. மதுபிரியர்கள் அதிர்ச்சி!

 
TASMAC

தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் மற்றும் பார்கள் மூட தேர்தலெ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

TASMAC

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள், பார்கள் மூடப்படுகிறது.

tasmac

அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

From around the web