பிளாக்மெயில் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் என்று கூறியதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேரறிஞர் அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,
"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்...” என்று கூறியுள்ளார்
அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி முதலமைச்சர் குறிப்பிட்டு இருப்பதால், சட்டப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு கையிலெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.
— M.K.Stalin (@mkstalin) February 16, 2025
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால்… pic.twitter.com/NtbYkV4FZK