மாணவர்களே தயாரா இருங்க.. நாளை 10 மற்றும் 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
Result

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 3,60,908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் என மொத்தமாக 7,73,688 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதேபோல 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வை 9,38,291 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

exam

இதனிடையே 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என கேள்வி எழுந்திருந்தது. முன்னதாக ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை (மே 19) வெளியிடப்பட உள்ளது. இதன்படி 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அதே தினம் பிற்பகல் 2 மணிக்கு ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

govt-exam

மேலும் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் சமர்பித்த செல்போன் எண்ணிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

From around the web