தமிழ்நாட்டில் 3 வது குழந்தை பெற்றால் சிறப்புச் சலுகை? முதலமைச்சர் சொன்னது என்ன தெரியுமா?

 
stalin

அண்மையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மிகவும் பெரிதாகப் பேசப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்கள், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில்  பாராளுமன்றத்தில்  தொகுதிகளை இழக்கும் நிலை உருவாகுவதை தடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அளவிலான பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஒன்று திரட்டி சென்னையில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தினார் இதில் கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டு அடுத்தக் கூட்டம் தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் நடைபெற உள்ளது.

அந்தக் கூட்டத்தின் முடிவில்  குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளவர்கள் உடனடியாகப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதால் தமிழ்நாட்டு மக்கள் தொகையை அதிகரிக்க மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை, சிறப்புச் சலுகை வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றக் கூட்டத்தொடரை முடித்து விட்டு கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ” மக்கள் தொகை சரிந்துள்ளதால் இத்தகைய ஊக்கத்தொகைத் திட்டம் தேவைப்படலாம். ஆனால் 3வது குழந்தை கட்டாயமில்லை என்று பதிலளித்துள்ளார். 

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதலமைச்சரின் 3வது குழந்தை ஊக்கத்தொகை பதில் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது,

From around the web