பொன்முடி பேச்சுக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்... தம்பிதுரை கண்டுபிடிப்பு!!

 
Thambidurai

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பொன்முடியின் பேச்சைக் கண்டித்து அதிமுக சார்பில் வாணியம்பாடியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தம்பிதுரை எம்.பி, பொன்முடியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று கூறியுள்ளார்.

செந்தில்பாலாஜி வசம் உள்ள துறை தான் இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று டாஸ்மாக் ஐ குறிப்பிட்டுச் சொன்னார் தம்பிதுரை. அமைச்சர் பொன்முடி எங்கும் குடித்து விட்டுப் பேசியதாக தகவலோ குற்றச்சாட்டோ இல்லை. பொன்முடியின் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது இத்தகையக் குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த நிலையில் பொன்முடியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜியை ஏன் வம்புக்கு இழுத்தார் தம்பிதுரை என்று தெரியவில்லை. 

ஆனால் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையை தோற்கடித்து காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியை வெற்றிபெறச் செய்ததில் செந்தில் பாலாஜிக்கு பெரும் பங்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர். அந்தக் கோபத்தில் தான் தம்பிதுரை செந்தில் பாலாஜியை சம்மந்தம் இல்லாத விவகாரத்தில் இழுத்துள்ளார் என்று அதிமுகவினரே கருதுகின்றனர்.

செந்தில் பாலாஜி இருக்கும் ஆட்சி போய்விடும். அதனால் தான் ஜெயலலிதா அவருடைய அமைச்சர் பதவியை பறித்தார் என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.

From around the web