சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. வௌியான முக்கிய அறிவிப்பு!

 
Leave

சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Rain

இந்நிலையில், சென்னையில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மழை அச்சம் ஒருபுறம் இருந்தாலும் இந்த விடுமுறைக்கான காரணம், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave

இதனிடையே, வானிலை மையம் அறிவிப்பை அடுத்து புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

From around the web