ரூ. 1,000 உரிமைத்தொகையால் வந்த சிக்கல்.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
1000

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுவதால் பிற உதவித்தொகை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

1000

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, டிசம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை நேற்று வழங்கப்பட்டுள்ளது. இது வரையிலும், 4 மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

1000

இந்நிலையில், மகளிருக்கான ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்குவதால் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரூ. 1000 உரிமைத் தொகை பெறும் 570-க்கும் மேற்பட்டோரின் பெயர் வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இனி தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிருக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை கிடைக்காது என வேலைவாய்ப்புத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

From around the web