தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
Rain

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது, கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

Rain

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் நேற்று லேசான மழை காணப்பட்டது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 5  மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

அதன்படி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web