அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை... வானிலை மையம் அலர்ட்..!

 
Rain

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாட்டில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

Rain

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழையும் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain

தமிழ்நாட்டில் கோவையில் ஒரு சில பகுதிகளிலும், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web