ப்ளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு.. தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகிறது

 
exam

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில், மே 6-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7.80 லட்சம் மாணவ - மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வுக்கான விடைத்தாளை திருத்தும் பணிக்காக தமிழ்நாடு முழுவதும் 83 பள்ளிக்கூடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. 

exam

இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இப்பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

இப்பணி வருகிற 13-ம் தேதி முடிவடைகிறது. அதன்பின்னர், மாணவ - மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிடும் பணி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளவாறு ப்ளஸ்-2 தேர்வு முடிவு அடுத்த மாதம் (மே) 6-ம் தேதி வெளியாக உள்ளது.

results

ப்ளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 6-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும், தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web