70 வயதில் ப்ளஸ் 2 பாஸ்.. பட்டப்படிப்புக்கு போகும் சூப்பர் பாட்டி!!

 
Rani

70 வயதில் ப்ள்ஸ் 2 தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ள 70 வயது பாட்டி யோகா பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கப் போவதாக கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (70). இவர் தேனியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் கணவருடன் வசித்து வந்தார். 2020-ல் கணவர் காலமானார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தனித்தேர்வாக எழுதி கடந்த ஆண்டு ப்ள்ஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற ராணி பாட்டி, இந்த ஆண்டு ப்ள்ஸ் 2 தேர்வில் 346 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற்து குறித்து ராணி பாட்டி,

”சிறுவயதில் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அந்த கால சூழ்நிலையில் உயர்கல்வி செல்ல முடியவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்து விட்டார்.  என்ன செய்வது என்று யோசித்த போது உயர் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 

கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்ச்சி பெற்றேன். தற்போது பிளஸ் 2 தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். 50 ஆண்டுகளுக்கு பிறகு படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி. அடுத்ததாக யோகா பட்டப் படிப்பு படிக்க விருப்பம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

From around the web