ப்ளஸ்-2 தேர்வில் தோல்வி.. ஒரே நாளில் 5 மாணவர்கள் தற்கொலை..!! தமிழ்நாட்டில் தொடரும் சோகம்!

 
+2 students

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வி அடைந்த 5 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேர்வு தோல்வி அடைந்த 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் தேவா (17). ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Dead Body

இதேபோல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தாருண்யா (17) ப்ளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா (17). பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்த இவர், 5 பாடங்களில் தோல்வி அடைந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த நாராயண குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (17), தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். மாணவர் ஹரி 11-ம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை, அதற்கும் தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

suicide

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (19). கடந்த ஆண்டு ப்ளஸ்-2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித்தேர்வராக எழுதினார். இதில் 29 மதிப்பெண்கள் எடுத்து மீண்டும் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி ரமணி, மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருந்ததி (18), திருச்சிற்றம்பலத்தில் உள்ள காந்தி மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து, பொதுத்தேர்வு எழுதினார். 600-க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என்று நம்பினார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் அருந்ததி, 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார். மதிப்பெண் குறைந்ததால் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

From around the web