4 மாவட்ட மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!

 
Rain

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 22-ம் தேதி வரை  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வழக்கத்தை விட தமிழ்நாட்டில் இன்று வெயில் 5 டிகிரி வரை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாக இருக்குமாம். தமிழகத்தில் கோடை மழை முடிந்துள்ளதால் வெயில் அதிகரிக்கிறது.

Rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web