அதிமுக கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்!!

 
EPS

நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று தேமுதிக அறிவித்த நிலையில், ஆட்சியில் பங்கு தரும் கூட்டணியில் தான் சேருவோம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். இந்த இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்தவை ஆகும். இந்நிலையில் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. 

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக்,  “தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள்.

பாஜகவை பொறுத்தவரை தமக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தமக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது” என்று கூறியுள்ளார்.

அதிமுக கட்சியினரிடையே பாஜக கூட்டணி குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக விலகிச் செல்வது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

From around the web