அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய மீன்!துணை முதலமைச்சர் திறந்து வைத்த  நவீன மீன் அங்காடி!!

 
udhay

சென்னையில் 82 கடைகளுடன் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கே உள்ள மீன் கடைகளைப் பார்வையிட்ட போது பல்வேறு மீன் வகைகள் அவருக்கு காட்டப்பட்டது. மிகவும் நீளமான ஒரு மீனைப் பார்த்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியந்து போனார்.

சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில் 2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் இந்த அங்காடி கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 82 கடைகளுடன் உள்ள இந்த நவீன மீன் அங்காடி புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

From around the web