எந்த ’ஷா’ வந்தாலும் எங்களை ஆள முடியாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!!

 
Stalin

திருவள்ளூர் மாவட்டத்தில் நலத் திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஷா வந்தாலும் எங்களை வெல்ல முடியாது என்று சூளுரைத்துள்ளார்.

“தமிழ்நாட்டில் உள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள பாஜக வெல்ல முடியாது. உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள் ஒரு கை பார்ப்போம். அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் எங்களை ஆள முடியாது. ஏனெனில் இது தமிழ்நாடு! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்களின் திட்டம் பலிக்காது.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு! தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்… எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்! 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

From around the web