தமிழ்நாட்டில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

 
TCV

இன்று ஒரே நாளில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபடவில்லை, இதனால் மொத்த பாதிப்பு 36,10,654 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை, சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யபடவில்லை. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,97,155 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 2 பேர் குணமடைந்துள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,72,565 ஆக உள்ளது. தற்போது 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 423 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,97,46,038 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று உயிரிழப்பு இல்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,081 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

From around the web