மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு... 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு..!

 
Practical

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 - 2023-ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியானது. அதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த தேர்வானது ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வானது ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதயுள்ளனர். 

Practical

அடுத்ததாக 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும். 

இந்நிலையில் கடந்த வருடம் 11-ம் வகுப்பு படித்த செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் தற்போது நடைபெறும் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

DPI

கடந்த வருடம் 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாமல் தற்போது 12-ம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு மார்ச் 1 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்படும் எனவும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பட்டியல்களை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

From around the web